search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னாள் ஊராட்சி தலைவர் வீட்டில் கொள்ளை"

    பள்ளிப்பட்டு அருகே முன்னாள் ஊராட்சி தலைவர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.85 ஆயிரம் பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பள்ளிப்பட்டு:

    பள்ளிப்பட்டை அடுத்த செங்காலபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் எத்திராஜ் (57).

    அ.தி.மு.க. சார்பில் முன்பு இந்த கிராமத்தில் பஞ்சாயத்து தலைவராக இருந்த எத்திராஜ், தற்போது ஆந்திராவில் குளிர்பான கடை நடத்தி வருகிறார். அடிக்கடி இங்கு வந்து செல்வார். இந்த வீட்டை இவருடைய மகள் தேவகி கவனித்து வருகிறார்.

    நேற்று வீட்டை சுத்தப்படுத்திய தேவகி பின்னர் கதவை பூட்டி விட்டு தனது கணவர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் இந்த வீட்டின் கதவு இன்று திறந்து கிடந்தது.

    இது பற்றிய தகவல் தேவகிக்கு தெரிய வந்தது. உடனே அங்கு சென்று பார்த்தார். அப்போது அவருடைய தந்தை எத்திராஜின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவும் திறந்து கிடந்தது.

    அதில் இருந்த ரூ.85 ஆயிரம் ரொக்க பணம், 4 சவுரன் நகை ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. இது குறித்து பொதட்டூர் பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். #Tamilnews

    ×